Mittwoch, 21. Mai 2008

வானம் எம் வசம்

வானம் எம் வசம்
பால் வெளியிலுள்ள ஏதோ ஒரு அல்லது பல நட்சத்திரக் குடும்பங்களிலுள்ள உபகோள்களில் உயிரினங்கள் வாழக்கூடிய சாத்தியக்கூறுகள் பற்றித்தாங்கள் கூறிய விடயங்கள் விஞ்ஞானிகளாலும் தர்க்கரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டதாக உள்ளது. அப்படி ஏதாவது ஒரு கோளில் எம்மைவிட விஞ்ஞான,தொழில்நுட்ப அறிவுபெற்ற உயிரினங்கள் இருந்தாலும் அவர்கள் ஆய்வுகளுக்காகவோ அன்றி வேறேதோ ஒரு காரணத்திற்காகவோ இப்புவிக்கு வந்து சென்றார்களா? என்பதே சர்ச்சைக்குரிய விடயமாகும். இவ்வாறுவந்ததற்குச் சான்றாகக் கூறப்படுவன.1.சிலரால் பார்த்ததாகச் சொல்லப்படும் அல்லது புகைப்படமெடுத்ததாகக் காண்பிக்கப்படும் வட்டவடிவான ஒளிப்பிளம்புபோன்ற அல்லது பறக்கும்தட்டு எனப்படும்பொருள.;.அல்லது கூடுதலாக சிறய தனியார் விமானிகளாலும் சில சமயங்களில் சாதாரணபோக்குவரத்து விமானிகளாலும் வானில் கண்டதாகக் கூறப்படும் ஏவுகணைகளையொத்த அசாதாரண பொருட்கள். இவை சம்பந்தமாக ஆய்வுகளை மேற்கொண்ட சோவியத் விஞ்ஞானிளொருவர் கூறுகிறார்";.இவற்றில் 99 சத வீதமானவற்றிற்குரிய காரணங்களாக சோவியத்தில் இராணுவ, வானியல் சம்பந்தமான ஆய்வுகள் அரசாங்கத்தால் பொது மக்களுக்கு மறைக்கப்படுவதால் இவ்ஆய்வுகள் சம்பந்தமான செயற்கைக் கோள்கள், ஏவுகணைகளைத் தற்செயலாகக் கண்டவர்கள் ஏற்படுத்தும் குழப்பமே இவை. மற்றும் 1வீதம் தற்செயலாக நடந்த சில நிகழ்வுகளே".( ஒரு சம்பவம் ஞாபகம் வருகிறது: ஊரில் எமது அயலவர் நடுச்சாமம் படம் பார்த்து விட்டு சைக்கிளுக்குக் காத்துப் போனதால் உருட்டிக்கொண்டு வரும்போது வைரவர் கோயிலடியில் நிலத்தில் கால் முட்டாமல்ப் பேய் நடந்து வருகுது எனக் கத்திக் கொண்டு சைக்கிளையும் போட்டு விட்டு ஓடி வந்தவர். காலையில்ப் போய்ப் பார்த்தால் அது கோயில்க் கிணற்றடியில் யாரோ குளித்துவிட்டு எடுக்க மறந்து போய் மரத்தில் காய்ந்து கொண்டிருந்த வேட்டி !......)2. ஆதாரமாக் காட்டப்பட்ட புகைப்படங்களில் அநேகமானவை ஏமாற்றுவழிகளில் எடுக்கப்பட்டிருந்தது நிருபிக்ககப்பட்டுள்ளது. வானில் ஏற்படும் மாற்றங்களைப் பதிவு செய்ய நிறுவப்பட்டடுள்ள புகைப் படக் கருவிகள் இன்று வரை இப்படியான எதையும் பதிவு செய்யவில்லை.3. பல நாடுகளில்( அமரிக்கா,இங்கிலாந்து,சுவீடன்) பயிர்களுக்கு நடுவே வட்ட வடிவில் ஏற்படும் சேதங்கள் . இதன் உச்சக்கட்டமாக 2 வட்டங்கள் அருகே இருந்து அதை இணைப்பதாக காலடிச்சுவடுகளும் இருப்பதாகப் பரபரப்பாகப் பேசப்பட்டது.இது அந்நிய கிரகப் பறக்கும் தட்டால் ஏற்படுகிறதா என ஆராய்ச்சி செய்ததாகக் கூறிக்கொண்ட இங்கிலாந்தைச் சேர்ந்த Pயவ னுநடபயனழ என்பவர் 5 புத்தகங்கள் வரை எழுதிப் பெரும் பணக்காரனாரார். பின் மேற்கொண்டும் ஆராய்ச்சி செய்வதாகக் கூறிக்கொண்டு அமரிக்காவில் தங்கினார். அண்மையில் சுவீடன் நாட்டு ஆராய்ச்சி நிறுவன வல்லுனர் ஓருவரிற்கு அவர் அளித்த பேட்டியில் இவை நம்புவதற்கு அற்ற ஏமாற்றுச் செயல்களெனத் தான் ஒத்துக்கொள்வதாகக் கூறினார். பின்பு ஒரு சந்தர்ப்பத்தில் சுவீடன் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இவ்வாறான நிகழ்வைத் தானும் 2 நண்பர்களுமாகச் செய்ததாக 18 வயது இளைஞர் ஓருவர் ஆதாரங்களுடன் ஒத்துக்கொண்டார்.4. இவ்வாறு காணப்பட்ட எந்தச் சந்தர்ப்பத்திலும் அவ்விடத்தில் இப்புவியில் காணப்படாத அல்லது அவ்விடச் சுழலிற்கு ஒவ்வாத எப்பொருளுமே தடயமாகக் கிடைக்கவில்லை.
நமது தேசத்தின் வான்பரப்பில் காணப்பட்ட விவரம் தெரியாத பொருட்கள் உண்மையாகக் காணப்பட்டதாக வானியல் ஆராய்ச்சி மையமும் ஊர்ஜிதப்படுத்தியிருப்பதால் முன்னே நான் ஆய்வு செய்த விடயங்களுடன் இவற்றைத் தொடுத்துப் பார்க்கும் போது ஒருசந்தேகம் எழுகிறது. பயங்கரவாதத்தை ஒடுக்குகிறேன் என்ற போர்வையில் அமெரிக்கா தனது அரசியல் மற்றும் பொருளாதார நலன்களுக்கு இடையூறாக இருக்கும் அமைப்புக்களையும், ஒடுக்கு முறைகளுக்கு எதிராகத் தோன்றிய விடுதலைப் போராட்டங்களையும் தனது இரும்புக்கரம் கொண்டு நசுக்குவது நாம் அறிந்ததே. இதில் அமெரிக்காவுக்கு அதன் நேச நாடுகள் மட்டுமன்றி பயங்கரவாதத்தின் பிறப்பிடங்களான பாகிஸ்தான் அரசு, இலங்கை அரசு போன்றவையும் தமது சொந்த நலன்களுக்னகாக ஆதரவு தெரிவிப்பதுவும் அதை அமெரிக்காவும் ஏற்றுக் கொண்டுள்ளதும் அறிந்ததே. அமெரிக்க இராணுவத்தின் நெறியாள்கை மற்றும் பயிற்ச்சிகள் போன்றவற்றையெல்லாம் முறியடித்து விடுதலைப் புலிகள் அமைப்பு களத்தில் வெற்றிகள் குவிப்பது அதன் கண்களை நெடுநாட்களாக உறுத்திவருவதால் , இன்றைய சமாதானச் சூழலைப் பயன்படுத்தி எமது பகுதிகளில் அமெரிக்காவோ அல்லது அதன் நேச நாடுகளோ நடத்தும் வேவு நடவடிக்கையின் ஒரு அம்சமாக இது இருக்கலாமோ என்று எண்ணத் தோன்றுகிறது. அண்மையில் இங்கிலாந்து அரசு அவசரம் அவசரமாக யாழ் மணிக்கூண்டுக் கோபுரத்துக்கு அளித்த மணிக்கூட்டு இயந்திரங்களும் வேறேதும் நோக்கங்களுக்காக கொடுக்கப்பட்டதோ என்பதும் ஆராயப்பட வேண்டியதே.போராட்ட அமைப்புகளுக்கு என்றும் தேவை எச்சரிக்கையும் எதையும் சந்தேகக் கண்களுடன் நோக்கும் பண்பும.; இதில் எமது அமைப்பு எப்பொழுதும் சரியான வழியிலேயே செயல்பட்டு வந்திருப்பதனால் இன்றும் அவர்கள்மீதுள்ள நம்பிக்கையில் வானம் என்றும் எம் வசமே என நாம் ஆறுதலடையலாம்.
ஆக்கம்: அம்பலத்தார்

Keine Kommentare: