Mittwoch, 21. Mai 2008

உண்டி கொடுத்தார் உயிர் கொடுத்தார்

உண்டி கொடுத்தார் உயிர் கொடுத்தார்
------------------------------------------------
தனிமனிதனுக்குணவில்லையெனில் ஜெகத்தினை அழித்திடுவோம் முழங்கினான் பாரதி.
தீன் உண்டு விலங்கிற்குஇரை உண்டு பறவைக்குநீருண்டு நிலத்திற்குஎமக்குண்டா உணவு?வன்னிக்காட்டிலே விலங்குகள்போல்உணவுதேடித் திரிகிறார் எம்மக்கள்
பிஞ்சுகள் வாடுதுகஞ்சிக்கே கதியின்றிகூன் உடம்புகள் வதங்குதுகூழுக்கே வழியின்றிவற்றிய உடம்புடன் கற்பிணித்தாய்மார்விட்டிடலாமா? அவர்தம் உண்டி சுருங்கிட? ஒரு நாளும் இல்லை
உணவை ஒறுத்த அன்னைபுபதிஉண்ணாநோன்பிருந்து உயிர்நீத்த தியாகி திலீபன் உண்டியை விடுத்து உயிரையும் விடுத்தஇவர்கள் கேட்டது பட்டமா பதவியாகேட்டது நீதியும் உரிமையும் இன்றும் வன்னிக்காட்டிலேஎத்தனை திலீபன் எத்தனை புபதிசெத்தும் மடிந்தும் சாவின் விழிம்பிலும்
ஈழம் மலரும் நாளைநாடு செழிக்கும் நாளைஅகன்றிடும் பசியும் பிணியும்அன்றுவரை அன்னிய அரசுக்கு அடிபணியாமல் காத்திடுவோமெனஉறுதியுடனிருக்கும் எம்புலத்துறவுகளுக்குஒருவேளை உணவைஒறுத்தேனும் உதவிடுவோம்
தேனும் ஊனும் காயும் கனியும்அன்பும் சேர்த்துஅளித்த குகனைநால்வர் நாங்கள் இன்றுடன் ஐவரானோம் என அணைத்தான் இராமன்
அமுதசுரபி எங்கள் ஈழம்அவளின் பிள்ளைகள் நாங்கள்; ஈழத்தாய்மடியில் தவழ்ந்து புரண்டஉண்டு உறங்கிய வசந்தகாலத்தைமுடியுமா மறந்திட?எம்புலத்துறவுகளின் அவலநிலை மாறஒன்றாய் இணைவோம் சொல்லிலல்ல செயலில் காட்டுவோம்
நன்றி. கௌரி மகேஸ்.

Keine Kommentare: